இலங்கை

அம்பாறையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி!

Published

on

அம்பாறையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி!

அம்பாறையில் உள்ள பகுதியொன்றில் மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் குட்டி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே இன்றையதினம் (06-12-2024) இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த விபத்தில் Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை இனமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை (அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராமவாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப் பூனையாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

மேலும், கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த அரிய வகை புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version