இலங்கை

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

Published

on

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

  கொழும்பு கோட்டையில் கைவிடப்பட்டுள்ள 60 மாடிக் கட்டிடமான The One Transworks (KRISH) இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத முறையில் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி பணிப்பாளர் சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

நிபந்தனையுடன் கூடிய உத்தரவு பிறப்பித்த நீதவான், கட்டிடம் எந்த ஒரு பொருளும் இடிந்து விழும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், கீழே விழுந்து, விழக்கூடிய அழுகும் பொருட்கள் இருந்தால், அந்த பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் 55 நாட்களுக்குள் அவற்றினை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version