சினிமா

போற இடத்துக்கு எல்லாம் அலப்பறை கூட்டும் சந்தானம்.. இந்த publicity தேவையா?

Published

on

போற இடத்துக்கு எல்லாம் அலப்பறை கூட்டும் சந்தானம்.. இந்த publicity தேவையா?

கடைசியாக இவர் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படம் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றது. அந்த படம் வெளியாகும் நேரத்தில், பெரியார் பற்றி எழுந்த சர்ச்சை படத்துக்கு ஒரு மிகப்பெரிய ப்ரோமோஷன் ஆக மாறியது.

இந்த நிலையில், சமீபத்தில் இவர் பற்றிய ஒரு தகவல் வெளிவர, அதற்க்கு, இந்த publicity தேவையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

நடிகர் சந்தானம் தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கைவசம் இரண்டு மூன்று படங்கள் உள்ள நிலையில், தனுஷ் சிம்பு உள்ளிட்ட நடிகர்களை follow செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, அவரே இயக்கி, ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியானது.

அதை கேட்ட பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சில விஷமிகள், இது என்ன அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாவுல இருக்கு என்றும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

இப்படி பட்ட சூழ்நிலையில் தான் இவர் பற்றிய மற்றொரு செய்தி வேகமாக பரவி வருகிறது. ஹீரோவாக அறிமுகமான காலத்தில்,செல்லும் இடங்களுக்கு ரசிகர்கள் என்ற பெயரில் சிலரை வரவைப்பார்.

அவர்கள் சந்தானம் என்ட்ரி கொடுக்கும் நேரத்தில் பயங்கரமாக ஆரவாரங்கள் எழுப்புவார்கள். இதை ஒரு வாடிக்கையாகவே செய்து வந்தார்.

இப்போது தான் அந்த வேலையெல்லாம் செய்யாமல் இருக்கிறார். தற்போது இந்த செய்தி பரவ, இந்த publicity தேவையா என்று நக்கல் செய்து வருகின்றனர்.

Advertisement

அடுத்ததாக இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கவிருக்கும் நிலையில், அதை எப்படி பட்ட ஒரு படமாக இவர் உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version