இலங்கை

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி!

Published

on

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி!

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

இந்த நடவடிக்கைகள் இறக்குமதி செயன்முறையை சீர்செய்வதையும், உள்ளூர் சந்தைக்கு அரிசி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் 

இறக்குமதியாளர்கள் பொருந்தக்கூடிய கடமைகளைத் தீர்ப்பதன் மூலம் பொருட்களை விடுவிக்கவேண்டும் எனவும் 

சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் 

Advertisement

இதற்காக 2,500 முதல் 3,000 அரிசி கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version