இந்தியா
Weather Update: வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!
Weather Update: வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் வட தமிழ்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் நாளை புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை வரும் 9ஆம் தேதி நெருங்கும் என்றும், அதன்பிறகு வரும் 12ஆம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.