இந்தியா

மிஸ் இந்தியா அழகியை மிரட்டி 2 மணி நேரம் வீடியோ கால்.. அதிரவைக்கும் சம்பவம்

Published

on

மிஸ் இந்தியா அழகியை மிரட்டி 2 மணி நேரம் வீடியோ கால்.. அதிரவைக்கும் சம்பவம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள மான்ஸ் நகரில் வசிப்பவர் ஷிவாங்கிதா தீட்சித். இவர் வெஸ்ட் பெங்காலின் 2017 ஆம் ஆண்டிற்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர். சமீபத்தில் அன் நவுன் நம்பரில் இருந்து ஷிவாங்கிதாவிற்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பை எடுத்து பேசிய பெண்ணிடம் எதிர்முனையில் இருந்து பேசியவர், தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும், டெல்லியில் இருந்து பேசுவதாகவும் கூறியுள்ளார். மனித கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டு அதன் மூலம் அபகரிக்கும் பணம், தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement

தான் அப்படி எந்தவொரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்று ஷிவாங்கிதா கூறியுள்ளார். பதிலுக்கு அதட்டும் குரலோடு பேசிய மர்ம நபர், அதற்கான உரிய ஆதாரம் இருப்பதாக கூறி தங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உள்ளதாகவும் விரைவில் வீட்டிற்கு அதிகாரிகள் வரவிருப்பதாகவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். என்ன நடக்கிறது என ஷிவாங்கிதா யோசிப்பதற்குள் திடீரென்று அவருக்கு வீடியோ காலில் அழைப்பு வந்துள்ளது. கட் செய்தால் தன் மீது தவறு இருக்கும் என நினைத்துவிடுவார்களோ என எண்ணி அழைப்பை எடுத்துள்ளார்.

மறுமுனையில் சிபிஐ அதிகாரி போல உடை அணிந்து மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். ஷிவாங்கிதா குறித்த லேசான தகவல்களை திரட்டி அதை வைத்து மிரட்ட ஆரம்பித்தார். தாங்கள் செய்த குற்றத்திற்குப் பல வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், தங்களோடு கூட்டு சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களையும் பிடிக்க உள்ளோம் என கூறி அச்சுறுத்தினார். மேலும் கைது செய்வதற்கான அரசின் ஆணை கையில் உள்ளது எனக்கூறி போலி ஆவணங்களைக் காட்டி ஷிவாங்கிதாவை நம்ப வைத்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் தங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அரசுக்கு அபராதம் கட்ட வேண்டும் என கூறி ஷிவாங்கிதாவிடம் பணம் பறிக்க ஆரம்பித்தனர். பணத்தை கொடுத்து விட்டால் பிரச்சினை முடிந்துவிடும் என நினைத்து மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு 99ஆயிரத்தை அனுப்பி உள்ளார். 2 மணி நேரம் நீடித்த வீடியோ காலில் கதவை திறக்காததால் அவரது தந்தை கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கழித்து கதவை திறந்ததால் சந்தேகமடைந்த தந்தை, ஷிவாங்கிதாவிடம் கேட்க, நடந்ததைக் கூறி அவர் வருத்தப்பட்டிருக்கிறார்.

Advertisement

Also Read :
காதலனை சூட்கேஸில் அடைத்து கொலை செய்த காதலி.. காரணம் என்ன?

அப்போதுதான் மோசடி நபர்களிடம் சிக்கி தனது மகள் பணத்தை இழந்திருப்பது ஷிவாங்கிதாவின் தந்தைக்குத் தெரியவந்தது. ’ உடனே இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசீல் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் அரங்கேறும் மோசடி, எல்லையில்லாமல் தலைவிரித்தாடுவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றவரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version