இலங்கை
இலங்கையில் உணவின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு! வெளியான முடிவு
இலங்கையில் உணவின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு! வெளியான முடிவு
உலக சுகாதார அமைப்பினால் உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தலசீமியா மற்றும் சிறுநீரக நோயின் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அநுராதபுரத்தில் 15-17 வயதுக்கு இடைப்பட்ட 100 பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் தலசீமியா 23.9% ஆகவும் குருநாகலில் 20.6% ஆகவும் காணப்பட்டதாக பேராசிரியர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.