இலங்கை

ஐந்து மாணவர்களுடன் வாவியில் கவிழ்ந்த படகு: ஒருவர் உயிரிழப்பு!

Published

on

ஐந்து மாணவர்களுடன் வாவியில் கவிழ்ந்த படகு: ஒருவர் உயிரிழப்பு!

செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் நேற்று (07) மாலை 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Advertisement

இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version