இலங்கை

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை!

Published

on

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் பயணிக்கும் கப்பல்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

Advertisement

இது அடுத்த 24 மணித்தியாலத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11-12-2024 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பை அடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த கடல் பகுதிகளில் கிலோ மீட்டருக்கு தற்காலிகமாக மிக பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்த அறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல் பயணத்தில் ஈடுபடுவோரை கேட்டுக்கொண்டுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version