உலகம்

பங்களாதேஷ் நோட்டுக்களில் இருந்து நீக்கப்பட்ட தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம்!

Published

on

பங்களாதேஷ் நோட்டுக்களில் இருந்து நீக்கப்பட்ட தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம்!

பங்களாதேஷ் பண நோட்டுக்களில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன் மற்றும் ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.
இதன்காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது பங்கதேசத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

Advertisement

பங்களாதேஷ் நோட்டுக்களில் அந்த நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் அச்சிடப்பட்டு உள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ரஹ்மானின் படத்தை நீக்கிவிட்டு மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய ரூபா நோட்டுக்களை புழக்கத்தில்விட வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பங்களாதேஷின் முன்னணி நாளிதழின் செய்தியில் கூறியிருப்பதாவது;
புதிய பண நோட்டுக்களை அச்சிட பங்களாதேஷ் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி பங்களாதேஷ் மத்திய வங்கி சார்பில் புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

புதிய நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம் பெறாது. அவரது படத்துக்கு பதிலாக மதவழிபாட்டுத் தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் இடம்பெறும்.

Advertisement

அடுத்த 6 மாதங்களில் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் புதிய நோட்டுகள் அறிமுகம் ஆகும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகள் செல்லும் என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version