இலங்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Published

on

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. அனோஜா செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

எவ்வாறெனினும், தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version