இந்தியா

8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்.. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு.!

Published

on

8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்.. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு.!

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் இருந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 8 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.

பின்பு, கைதான மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. இதனைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மேலும், 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version