இலங்கை
அநுராதபுரத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு!
அநுராதபுரத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு!
அநுராதபுரம், இப்பலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலவ்வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வலவ்வேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் மற்றுமொரு நபருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ச)