இலங்கை

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை அறிமுகம் செய்த நாடு!

Published

on

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை அறிமுகம் செய்த நாடு!

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி சுமார் 04 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 43 கோடி) என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

10 அடி உயரம் உள்ள இந்த நத்தார் மரம் 2,024 திட தங்க நாணயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனைப் பொன் நாணய வியாபாரியான Pro Aurum உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட இந்த வடிவமைப்பின் மேல் பகுதியில் உள்ள நாணயம் 24 கரட் தங்க நாணயம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும் இதனை விற்பனை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என வடிவமைப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version