சினிமா

நான் கேன்சர் நோய் எதிர்க்கொண்ட காலத்தில் அவர் மட்டுமே துணை இருந்தார்..கௌதமி வருத்தம்

Published

on

நான் கேன்சர் நோய் எதிர்க்கொண்ட காலத்தில் அவர் மட்டுமே துணை இருந்தார்..கௌதமி வருத்தம்

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் டாப் நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. தமிழை தாண்டி பல மொழிகளில் நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை கௌதமி இப்போது அவ்வளவாக சினிமா பக்கம் காண்பது இல்லை.சமீபத்தில் ஜீ தமிழின் ஒரு சீரியலில் தலைகாட்டி இருந்தார்.அண்மையில் நடிகை கௌதமி தனது கேன்சர் நாட்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடித்ததும் நான் வருத்தப்பட்டது எனது மகளை நினைத்து தான். .எனக்கு பிறகு அவரை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற வருத்தம் இருந்தது, அவருக்காகவே நான் இந்த நோயை எதிர்க்கொண்டேன். சிகிச்சையில் இருந்த நாட்களில் நான் நிறைய எனது மகளுக்கு கற்றுக்கொடுத்தேன். நான் நோய் எதிர்க்கொண்ட காலத்தில் எனக்கு துணையாக இருந்தது எனது மகள் மட்டுமே வேறு யாரும் இல்லை என கூறியிருக்கிறார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version