இலங்கை

மக்களுக்கு வாகன இறக்குமதி சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published

on

மக்களுக்கு வாகன இறக்குமதி சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் எந்தவொரு தரப்பினரையும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும அவர் தெரிவித்ததாவது,

தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் 4-5 ஆண்டுகளாக வாகனம் இன்றி எங்களது துறை வீழ்ந்து கிடக்கிறது. நாங்களும் வாகனம் கொண்டு வர விரும்புகிறோம்.

Advertisement

இந்த ஆண்டு பேருந்துகள் மற்றும் லொறிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு ஏனைய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர முடியும் என்றும் நம்புகிறோம்.

தற்போது எந்தவொரு வாகனத்தையும் கொண்டு வர அரசாங்கத்திற்கு தீர்மானம் இல்லை. புதிய அரசாங்கத்தின் இந்த முடிவு மாறுமா என்று கூற முடியாது.

தங்களிடம் உள்ள வாகனத்தை விற்பனை செய்வது தொடர்பில் யாரும் குழப்பமடைய வேண்டாம். வாகனங்கள் எப்போது கொண்டுவரப்படும் என அரசாங்கம் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

Advertisement

இது தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version