இலங்கை

மின்சார சபை ஊழியர்களுக்கு இம்முறை போனஸ் இல்லை

Published

on

மின்சார சபை ஊழியர்களுக்கு இம்முறை போனஸ் இல்லை

ஆளும் கட்சியுடன் கூடிய இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

 சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இந்த ஆண்டு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

Advertisement

முன்னதாக, தான் அரசாங்கத்துடன் இணைந்த தொழிற்சங்கத்தை வழிநடத்துவதாகவும் எனவே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் கொடுப்பனவு பெற வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடாத்தத் தேவையில்லை என்றும் கூறினார்.

 எவ்வாறாயினும், CEB தனது ஊழியர்களுக்கான எந்தவொரு போனஸையும் இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version