இலங்கை

யாழில் விசேட அதிரடிப்படையினரால் துரத்திச் சென்று மடக்கிப்பிடிக்கப்பட்ட டிப்பர்!

Published

on

யாழில் விசேட அதிரடிப்படையினரால் துரத்திச் சென்று மடக்கிப்பிடிக்கப்பட்ட டிப்பர்!

யாழ்.பருத்தித்துறையில் மணல் கடத்திச்சென்ற டிப்பரை சாவக்கச்சேரியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றனர்.

இதன்போது குறித்த டிப்பர் கொடிகாமம் ஊடாக மந்துவில் பகுதியால் டிப்பர் தப்பிச் சென்று கொண்டிருந்தவேளை மண்ணை வீதியில் கொட்டி விட்டு, சாவகச்சேரி – கைதடி வீதியால் செல்லும் போது அவ் விடத்தில் வைத்து டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version