இலங்கை

யாழ்ப்பாணத்தில் பெரும் சோகம்… கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

Published

on

யாழ்ப்பாணத்தில் பெரும் சோகம்… கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாண பகுதியில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் வரணி வடக்கு, வரணி பகுதியை சேர்ந்த கோகிலான் தவராசா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவததாவது,

இவர் 3 நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் வரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் மூச்சு விட அவருக்கு சிரமம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement

நேற்றைய தினம் அவர் மந்திகை வைத்தியசாலையில் மயங்கிய நிலையில் இன்று காலை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (09-12-2024) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற் கொண்டார்.

Advertisement

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version