இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் அதிரடி கைது!

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் அதிரடி கைது!

டுபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதந்த 2 பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் இன்று அதிகாலை 12.45 மணியளவில் கைது செய்துள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் டுபாயில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்து போதும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களை தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்போது 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மென்செஸ்டர் ரக 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகள் அவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

Advertisement

இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் மற்றையவர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version