இலங்கை

கல்வி அமைச்சின் வரவு – செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!

Published

on

கல்வி அமைச்சின் வரவு – செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவு தொடர்பிலான வரவு-செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

Advertisement

இதில் கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி பிரதி அமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உட்பட அமைச்சுக்களின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version