உலகம்

சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Published

on

சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் “டசின் கணக்கான துல்லியமான வான்வழித் தாக்குதல்கள்” அடங்கும் எனவும், மத்திய சிரியாவில் உள்ள B52s, F-15s மற்றும் A-10s போன்ற விமானங்களைப் பயன்படுத்தி 75க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

“ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் முகாம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அந்த அமைப்பை சீர்குலைக்கவும், தோற்கடிக்கவும், பயங்கரவாத குழு வெளிப்புற நடவடிக்கைகளை நடத்துவதைத் தடுக்கவும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதாயத்தைப் பெற முயலவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் நடந்துகொண்டிருக்கும் பணியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், சேத மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும், நடவடிக்கைகளில் பொதுமக்கள் யாரும் கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.

நட்பு நாடுகள் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுடன் சேர்ந்து, “சிரியாவில் இயங்கும் காலகட்டத்தில்” ஐஎஸ்ஐஎஸ் இன் செயல்பாட்டு திறன்களை பலவீனப்படுத்த அதன் செயல்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக சென்டகாம் கூறியுள்ளது.

Advertisement

அந்த அமைப்பை மீண்டும் கட்டமைக்க மற்றும் சிரியாவின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா தெரிவித்துள்ளார்.

“சிரியாவில் உள்ள அனைத்து அமைப்புகளும் அவர்கள் எந்த வகையிலும் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புகொண்டிருந்தால் அல்லது ஆதரித்தால் நாங்கள் அவர்களுக்கு பொறுப்புக் கூறுவோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version