இலங்கை

சிவனொளிபாதமலை செல்வோரிக்கான அறிவித்தல்

Published

on

சிவனொளிபாதமலை செல்வோரிக்கான அறிவித்தல்

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிவனொலிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில், அந்த குப்பைகளை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அல்லது சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில்களில் (அதாவது நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில்) உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிவனொலிபாதமலை யாத்திரை காலத்தில் நடத்தும் குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version