இலங்கை
இலங்கையில் புத்தக விற்பனையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
இலங்கையில் புத்தக விற்பனையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
இலங்கையில் வற் வரி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரேரணையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்துள்ளார்.