இலங்கை

குடும்ப தகராறில் பறிபோன உயிர்; கணவர் கைது

Published

on

குடும்ப தகராறில் பறிபோன உயிர்; கணவர் கைது

 கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (10) இரவு மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கேகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

கொலை செய்யப்பட்டவர் மாத்தளை, லக்கேகல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மனைவி ஆவார்.

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை லக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version