இந்தியா
சட்டம் படித்தும் வழக்கறிஞராக முடியாமல் தவிக்கும் இலங்கை பெண்!
சட்டம் படித்தும் வழக்கறிஞராக முடியாமல் தவிக்கும் இலங்கை பெண்!
இலங்கை உள்நாட்டு போரின் போது, 1990 ஆம் ஆண்டு வாக்கில் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அதில் 9 வயதாக இருந்த சிறுமி வாசுகியும் ஒருவர். அகதியாக இருப்பதால், கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என நம்பிய வாசுகி, தீவிரமாக படிக்கத் தொடங்கினார். மதுரை உச்சப்பட்டி முகாமில் தங்கி இருந்த அவர் ஆஃபர் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார். எனினும், வாசுகிக்கு இந்திய குடியுரிமை இல்லாததால் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாமல் 20 ஆண்டுகளாக தவித்து வருகிறார்.
தனது வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு உதவும் பணியை மேற்கொண்டு வரும் வாசுகி, தன்னைவிட வயதில் இளையவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதை கண்டு ஏக்கத்துடன் நிற்கிறார். பெரும்பாடு பட்டு படித்த கல்வி தனக்கு கைக்கொடுக்காத நிலையிலும், தனது 3 குழந்தைகளையும் படிக்கவைக்கிறார் வாசுகி.
உயிரை மட்டுமே மிச்சமாக கொண்டு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த நிலையில், வாழவைத்த இடத்தை விட்டு போக என்றுமே நினைத்ததில்லை என்று கூறும் வாசுகி, ஆனால் தற்போது அது குறித்து யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்.
Also Read :
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்.. ‘வைக்கம்’ வரலாறு
குடியுரிமைக்கான கதவுகள் எப்போது திறக்கும் என தெரியாது. ஆனால், குறைந்தபட்சம் வழக்கறிஞராக பதிவு செய்வதற்கான வாய்ப்பையாவது இந்திய பார் கவுன்சில் அளிக்குமா என ஏங்கி நிற்கிறார் இந்த இலங்கை பெண்.