இலங்கை

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்!

Published

on

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்!

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை நேற்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிவனொலிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில், அந்த குப்பைகளை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அல்லது சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில்களில் (அதாவது நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில்) உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிவனொலிபாதமலை யாத்திரை காலத்தில் நடத்தும் குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்குமாறு அனைத்து பக்தர்களிடமும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version