இலங்கை
புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்!
புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்!
புறக்கோட்டை 5ம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் இன்று (11-12-2024) நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டனர்.
அரிசி கையிருப்பு பதுக்கல் உள்ளிட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடை மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலைக் குறியீடுகளை காட்சிப்படுத்தாமை, காலாவதியான அரிசி விற்பனை உள்ளிட்ட ஏனைய விதிமீறல்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.