இலங்கை

விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழப்பு

Published

on

விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழப்பு

  மிஹிந்தலை – அநுராதபுரம் வீதியில் குருந்தன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

உயிரிழந்தவர் மிஹிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார்.

மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை நோக்கிப் பயணித்த ஜீப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version