இந்தியா
Rameswaram fishermen| மீண்டும் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை… ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
Rameswaram fishermen| மீண்டும் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை… ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதால், வங்கக்கடலில் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால், ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீறிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், படகுகளைப் பாதுகாப்பாக இடைவெளி விட்டு நிறுத்தும்படியும் தெரிவித்துள்ளனர்.