இலங்கை

இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-நாமல் வலியுறுத்து!

Published

on

இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-நாமல் வலியுறுத்து!

தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  வலியுறுத்தியுள்ளார். 

தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி வெளியாகியிருந்தது.

Advertisement

இந்தநிலையில், குறித்த காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 

இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 

போரின் விளைவாக எந்தவொரு இளைஞரினதும் எதிர்காலம் மறுக்கப்படக்கூடாது எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

மேலும் குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  மேலும் தெரிவித்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version