இலங்கை

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரத்தினை பகிர்ந்து வழங்க நடவடிக்கை!

Published

on

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரத்தினை பகிர்ந்து வழங்க நடவடிக்கை!

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55ஆயிரம் மெற்றிக்தொன் எம். ஓ.பி உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டிருந்தது.

Advertisement

குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி மற்றும் கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டதுடன் குறித்த உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன் தெரிவித்துள்ளார்.  (ப)
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version