இலங்கை
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அதிரடி சோதனை நடவடிக்கைகள்!
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அதிரடி சோதனை நடவடிக்கைகள்!
நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சோதனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைவதோடு சில பகுதிகளில் விலை குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
5,200 மெற்றிக் தொன் அரிசி முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.