இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் (13.12.2024) யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்   இடம்பெற்றுள்ளது.

Advertisement

இதன்போது அர்ச்சுனா எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 15 நுழைவாயில்கள் உள்ளன. நோயாளிகளுக்கு மாத்திரமன்றி பல உயர் அதிகாரிகளும் அவர்களை தொடர்பு கொண்டு சேவையை பெறுகின்றனர்.

வைத்தியசாலை நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏற்றவகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு இருக்க அதை விடுத்து எம்மை அச்சுறுத்தி அல்லது ஊழியர்களை அச்சுறுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கின்ற எவரும் அல்லது அது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

Advertisement

இதேவேளை, இங்குள்ள உயர் அதிகாரிகளை என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்பது தவறான விடயம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்ற போது ஒரு சிலர் பல உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஏற்படுகின்ற விதத்தில் நடந்து கொள்ளுவாராக இருந்தால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version