இலங்கை

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

Published

on

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்றையதினம் (15-12-2024) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளையில் எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,

Advertisement

கண்டியில் மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,

குருநாகலில் ரிதீகம பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,

மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version