இலங்கை

இலங்கையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வேன்! ஒருவர் உயிரிழப்பு! 7 வைத்தியசாலையில்

Published

on

இலங்கையில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வேன்! ஒருவர் உயிரிழப்பு! 7 வைத்தியசாலையில்

மாத்தளை, ரிவஸ்டன் – லக்கல வீதியில் பயணித்த வேன் ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த வேனில் 8 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்கள் காயமடைந்த நிலையில் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காலியில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற குழுவினரே சிக்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version