இலங்கை
காலியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பாரிய அளவில் நிதி மோசடி!
காலியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பாரிய அளவில் நிதி மோசடி!
காலியில் பிரபல வெளிநாட்டு வேலைவாய்ப்பு கம்பனியின் கிளை கம்பனி எனக் கூரி பெருமளவானவரக்ளிடம் இருந்து பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மஹா மோதர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகக் கிளையின் ஒரு அங்கம் என்றும், கீழ்மாடியில் இயங்கும் அலுவலகம் மூலம் வெளிநாட்டு வேலைகள் வழங்கப்படுவதாகவும் கூறி பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கம்பனிக்கு வருபவர்கள் அலுவலகத்திற்கு வந்த பின்னர், அங்குள்ள அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, பணம் செலுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம்தெரிவித்தனர்.
இதன்படி 258 பேர் தலா 175,000 ரூபா வீதம் ருமேனியாவில் வேலை வாய்ப்புக்காக சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்களுக்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், உடனடியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு 4 இலட்சம் ரூபா வரை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் எவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு பரிந்துரை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு சிலர் மாத்திரம் 01 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரது தொலைபேசிக்கு பதிலளித்த அவரது தனிப்பட்ட உதவியாளர் சங்க பண்டார, மனுஷ நாணயக்கார தற்சமயம் ஊடகங்களுக்கு பதில் அளிக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அமைச்சரின் அலுவலக கட்டிடத்தில் வேறு பெயர் பலகையின்றி பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணத்தை அமைச்சர் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக ருமேனியா செல்வதற்கு பணம் வசூலித்த சில வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஏற்கனவே திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.