இலங்கை

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! தொடரும் சோக சம்பவங்கள்

Published

on

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! தொடரும் சோக சம்பவங்கள்

யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக எலிக்காய்ச்சல் எனப்படும் ஒரு கொடிய நோய் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரையில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில், கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

குறித்த இளைஞன் நேற்றிரவு (14-11-2024) 11:30 மணியளவில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கரவெட்டி – தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்,

Advertisement

அவரின் உடலில் நோய் அதிகரிக்க யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version