இலங்கை

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Published

on

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கிற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய வரியை தொடர்ந்து செலுத்தாமல் தவறியிருந்தால், அதை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், எந்தவொரு வரி வகைக்கு அமைவாக செலுத்த வேண்டிய சுயமதிப்பீட்டு வரி, நிலுவை வரி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டு வரியை டிசம்பர் 26-ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அதற்கான அபராத நிவாரணத்தை பெற முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரி மற்றும் வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின்படி கள ஆய்வுப் பணிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் உரிய அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version