இலங்கை

கடும் எச்சரிக்கையுன் எம்பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!

Published

on

கடும் எச்சரிக்கையுன் எம்பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!

  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற அருச்சுனா எம்பி, அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இதுதொடர்பாக இன்று(16) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.

இதன்போது எம்பி இராமநாதன் அர்ச்சுனா , கடும் எச்சரிக்கையுடன் பிணையில்  விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version