இலங்கை

குடிபோதையில் இ.போ.ச அரச பேருந்தை செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி!

Published

on

குடிபோதையில் இ.போ.ச அரச பேருந்தை செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக பேருந்தை மது அருந்திய நிலையில் ஓட்டிச் சென்ற சாரதியை தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மது போதையில் பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக இந்த சாரதி மீது வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

இந்த சாரதி இதற்கு முன்பும், இதே தவறைச் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய பிராந்திய இ.போ.சபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடமை நேரத்தில் மது போதையில் இருந்தமை, வீதி ஒழுங்குகளை மீறியமை தொடர்பாக சாரதி மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version