இலங்கை

தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு

Published

on

தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

Advertisement

இந்நிலையில் அவர் நேற்று சனிக்கிழமை (14) மாலை சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் நீண்டநேரமாகியதால் அவரை அவரது நண்பர்கள் தேடியுள்ளனர்.

அவரது சடலம் இன்று காலை ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இச்சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version