சினிமா

மறைந்த தபேலா கலைஞருடன் கலஹாசன்! உருக்கமாய் வெளியிட்ட இரங்கல் பதிவு!

Published

on

மறைந்த தபேலா கலைஞருடன் கலஹாசன்! உருக்கமாய் வெளியிட்ட இரங்கல் பதிவு!

உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் இவரின் மறைவை குறித்து நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.73 வயதான ஜாகிர் உசேன் இதய கோளாறு காரணமாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில வாரங்களாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலே இன்று இவர் உயிரிழந்துள்ளார். d_i_aஇவரின் மறைவை குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன்  ஜாகிர் உசேன்னுடன் தபேலா வாசிப்பது போல இருக்கும் புகைப்படத்தினை போஸ்ட் செய்து “ஜாகிர் பாய் நமக்குக் கொடுத்த காலங்களுக்காகவும், அவருடைய கலையின் வடிவத்தில் அவர் விட்டுச் சென்றதற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். குட்பை மற்றும் நன்றி”, என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version