இலங்கை

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்து கோரல் நாளை முதல் ஆரம்பம்!

Published

on

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்து கோரல் நாளை முதல் ஆரம்பம்!

மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி 08 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான முன்மொழிவுகள் மின்சாரக் கட்டணங்கள், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6ஆவது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு 03 என்ற முகவரிக்கும் அல்லது info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொதுமக்களின் ஆலோசனைக்கு அனுப்பப்படலாம் அல்லது 076 42 710 30 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் நீங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை, இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version