இலங்கை

வவுனியாவில் வீசிய பலத்த காற்றால் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்!

Published

on

வவுனியாவில் வீசிய பலத்த காற்றால் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்!

வவுனியா ரயில் நிலையம் முன்பாக இருந்த பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகின்றது.

இந்தநிலையில் இன்று மதியம் வீசிய காற்றின் காரணமாக வவுனியா ரயில் நிலையம் முன்பாக நின்ற பழையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

Advertisement

இந்த அனர்த்ததால் அருகிலிருந்து அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன உடைந்து சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து, மின்சார இணைப்பும் பாதிக்கப்பட்ட நிலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version