உலகம்

சிரிய டார்டஸ் நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!

Published

on

சிரிய டார்டஸ் நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!

சிரியாவின் கரையோர டார்டஸ் பிராந்தியத்தில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து நேற்று இஸ்ரேல் கடும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

விமானப் பாதுகாப்பு கட்டமைப்பு, ஏவுகணை களஞ்சியசாலை உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யுத்த கண்காணிப்பு மனித உரிமைகளுக்கான சிரிய மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் நாட்டை விட்டு தப்பியோடியதைத் தொடர்ந்து சிரியாவின் இராணுவ ஆற்றல்களை தாக்கியழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்றது. அத்தகைய நடவடிக்கையின் ஒரு பகுதியாக டார்டஸ் பகுதியில் இத்தாக்குதல் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பலத்த வெடிப்பு சத்தங்கள் வௌிப்பட்டுள்ளன. அதனால் அது ஒரு இரசாயன ஆயுத உற்பத்தி கூடமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிரியாவின் ஹயாத் தஹ்ரீர் அல் ஷாமின் தலைவர் அஹ்மத் அல்-ஷாராவிடம் தற்போதைய இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் குறித்து வினவப்பட்ட போது, 1974 இல் சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் இது என்றுள்ளார்.

Advertisement

இஸ்ரேலியர்கள் சிரியா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றனர். சர்வதேச சமூகம் தலையிட்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் எந்த நேரத்திலும் மோதலில் ஈடுபட சிரியா திட்டமிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version