இலங்கை

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Published

on

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரணில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது,

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் (16-12-2024) புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்க முன்னேற்றமாக கருத்தப்படுகின்றது.

ஏனெனில் இது இந்திய – இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தி வலுப்படுத்துகிறது.

பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நான் பாராட்டுகின்றேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version