இலங்கை

நாமலின் சட்டப்பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை ; விசாரணை நடத்த கோரி சிஜடி புகார்

Published

on

நாமலின் சட்டப்பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை ; விசாரணை நடத்த கோரி சிஜடி புகார்

11 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச சட்டப் பரீட்சையின் போது சலுகை பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

லஞ்சம் ஊழல் மற்றும் வீழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகார அமைப்பின் தலைவர் ஜமுனி சமந்தா துஷாரவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கமந்த துஷார, ராஜபக்ச மோசடியாக சட்டப்பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார்.

ராஜபக்ச தனது சட்டப் பரீட்சைக்கு தோற்றிய போது தனியறையில் இரண்டு சட்டத்தணிகள் அவருக்கு உதவியதாக துஷார மேலும் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தை சிஐடி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுத்தினார்.

“ நாமல் ராஜபக்சவின் சட்டப்பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பிட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்” என்று துஷார கோரினார்.

Advertisement

இதற்கிடையில், சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைகளால் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கல்வித் தகுதிக்கான ஆதாரங்களை வழங்க முடியாவிட்டால், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version