இலங்கை

பிரபல வர்த்தகர் ஒருவர் நிதி மோசடியில் கைது – யாழில் சம்பவம்!!

Published

on

பிரபல வர்த்தகர் ஒருவர் நிதி மோசடியில் கைது – யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம், 26லட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதான வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version