இலங்கை

மியன்மாரில் இருந்து நாட்டிற்கு திரும்பிய இலங்கையர்கள்!

Published

on

மியன்மாரில் இருந்து நாட்டிற்கு திரும்பிய இலங்கையர்கள்!

மியான்மரில் செயற்படும் மனித கடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இலங்கையர்கள் நேற்றறையதினம்  நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் எட்டு யுவதிகளும் அடங்கியிருந்த நிலையில் கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்ட அவர்களை அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

மனித கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் சிக்கியிருந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 

இன்னும் 14 இலங்கையர்கள் மியான்மரில் செயற்படும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முன்னதாக 2024 நவம்பர் 1 முதல் மியான்மரில் உள்ள கடத்தல் முகாம்களில் இருந்து இதுவரை 63 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version